நிர்மலா ஒரு இடைத்தரகர் மட்டுமே. இத்தகைய கொடுமையை, அரங்கேற்ற துடித்த ஆண் பேராசிரியர்கள் யார்..?

0 1,515

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி இணைப் பேராசிரியர் நிர்மலா என்பவர் பற்றி வந்திருக்கும் செய்தி வாசித்தேன்.
இவரை புகைப்படத்துடன் போட்டு பல குழுமங்களில் செய்திகள் வருகின்றன.

இவருக்கு சஸ்பெண்ட் மட்டும் போதாது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அது சரி.. இதில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் (ஆண்கள்) பற்றிய செய்தியைக் காண முடியவில்லை. அவர்களது பெயர், துறை, புகைப்படம் ஆகியவற்றை பகிர வேண்டியது அவசியம்.

ஏனெனில் நிர்மலா ஒரு இடைத்தரகர் மட்டுமே. இத்தகைய கொடுமையை, இழுக்கை ஏற்படுத்துபவர்கள் இந்த ஆண் பேராசிரியர்கள்.

நிர்மலாவிடம் விசாரணை நடத்தி அந்த ஆண் பேராசிரியர்களை அம்பலப்படுத்தி தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

ஏனெனில், பிரச்சனைகளின் மூலத்தைக் கண்டுபிடித்து அதற்கு நிவாரணம் தேடுவது தான் அறிவுடையோர் செயல். அதனைச் செய்வதை விடுத்து இடைத்தரகரைப் பற்றி மட்டும் பேசி அங்கலாய்த்து புலம்பி வருந்தி என்ன பயன்??

என்று தான் நாம் பிரச்சனைகளின் அடிவேரைத் தொட்டு அதனை சீர்செய்யப் போகிறோம்?

ஆணாதிக்கச் செயல்பாட்டினால் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக வஞ்சிக்கப்படும் போது அதனை வெளிச்சப்படுத்தி இளம் ஆய்வாளர்களைப் பாதுகாப்போம்.

தமிழக பெண்ணிய அமைப்புக்கள் இந்த விசயத்தை முன்னெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.

உடனே இவன் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுகிறான் என்று ஒரு கம்பு சுத்த வரும் பாருங்க..!

ஒரு இடைத்தரகி மாட்டியுள்ளாள் இன்னும் எத்தனை இடைத்தரகி இயங்குகிறார்களே…?

ஆணிவேரில் கை வையுங்கள் நுனி கிளையை முறித்துவிட்டு ஆணிவேரை புடுங்கியது போல சித்தரிக்காதீர் ..!தீர்வு..?

You might also like

Leave A Reply

Your email address will not be published.