தொழிற்சாலை கழிவுகள், சாக்கடை கழிவுகள் , மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை கடந்து பாவத்தை ஆற்றில் மூழ்கி கழிக்கிறேன் என்ற பெயரில் செய்த பாவங்கள், போகும் போக்கில் ஆற்றில் வீசிச்சென்ற கழிவுகள் அனைத்தையும் நாளது தேதியில் தான் பயணிக்கும் பாதைகளில் ஒதுக்கியும், தன்னோடு சுமந்தும் செல்கிறது ஒவ்வொரு ஜீவநதியும்,
ஒவ்வாத ஒரு உணவோ ஒரு செயலோ உடலயும் மனதையும் எவ்வாறு பாதிக்கிறதோ அது போன்றதொரு செயல்தான் இயற்கைக்கு எதிராக செய்யப்பட்ட மனித தவறுகள், பெருவெள்ளம், வரலாறு காணாத மழை, ஒரு புறம் தண்ணீரில் தவிக்கும் சமூகம் மிக அருகிலேயே ஒரு வாய் தண்ணீருக்கு தவிக்கும் சமூகம் என ஒவ்வொரு நாளும் பாடம் புகட்டுகிறது இயற்கை
துயருற்றோர் துயர் துடைக்கும் இந்த நேரத்தில் இந்த பெரும் துயருக்கான காரணத்தையும் மனதில் நிறுத்தி வரும்காலத்தில் இனியொரு பெரும்துயருக்கு ஆளாகாமல் நம்மையும் காத்து சந்ததியையும் காப்போம்.
படத்தில் உள்ளது பவானி கூடுதுறை மற்றும் கேரளா மாநிலம் அங்கமாலி பாலத்தில் நதிகள் ஒதுக்கிச்சென்ற கழிவுகள் ????????????????