தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் தாயுக்கும் எவ்வளவு முக்கியம் எனத் தெரியுமா..?

0 289

தாய்ப்பால் ஒரு ஆரோக்கியமான உணவு

தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் ஆரோக்கியமான உணவாகும். இதிலுள்ள ஆன்டி பாடீஸ் பிறந்த குழந்தைகளை தாக்கும் நோய்க் கிருமிகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து குழந்தையை பாதுகாக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சளி, சலதோஷம் மற்றும் காது பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகள் அதிகமாக வராது. மலச்சிக்கல் மற்றும் பேதி போன்ற பிரச்சினைகளும் குழந்தைகளை அதிகமாக தாக்குவதில்லை.

தாய் ஆரோக்கியமாக இருக்க உதவும்

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் தாய்ப்பால் கொடுப்பது தாயுக்கும் சிறந்த நன்மைகளை தருகிறது. இதய நோய்கள், மார்பக புற்று நோய், கருப்பை புற்று நோய் போன்ற பிரச்சினைகள் தாயுக்கு வராமல் தடுக்கிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது சுரக்கும் புரோலேக்டீன் என்ற ஹார்மோன் குழந்தை நீல நிறமாக மாறுவதை தடுக்கிறது. ஆக்ஸிடோசின் கருப்பை சுருங்கி விரிய உதவுகிறது.

தாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

தாய்ப்பால் கொடுக்கும் போது ஒரு தாய் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். விட்டமின்கள், கால்சியம், ஒரு நாளைக்கு 12 கிளாஸ் தண்ணீர் போன்றவற்றை குடிக்க வேண்டும். இதனால் தாய் எப்பொழுதும் நீர்சத்துடன் ஆரோக்கியமான உணவுடன் ஊட்டச்சத்துமிக்க பாலை குழந்தைக்கு கொடுக்க முடியும். ஆரோக்கியமான உணவு 500 கலோரிகள் வரை அடங்கி இருக்க வேண்டும்.

குழந்தைக்கு கிடைக்கும் நீண்டகால நன்மைகள்

உலக சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நீண்ட கால நன்மைகளை பெறுகிறது. தாய்ப்பால் குடித்த குழந்தைகள் வளர்ந்த வயதில் உடல் பருமன், அதிகமான எடை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் நன்றாக ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.

குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

தாய்ப்பாலில் அடங்கியுள்ள கார்போஹைட்ரேட், விட்டமின்கள், புரோட்டீன் மற்றும் கொழுப்பு போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள். மேலும் தாய்ப்பாலில் உள்ள ஆன்டி பாடீஸ், என்ஜைம்கள் மற்றும் ஹார்மோன் போன்றவை குழந்தைக்கு ஒரு ஆரோக்கியமான உணவாக அமைகிறது.

வலிமையான எலும்புக்கு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நாள்பட்ட மெனோபாஸ் ஆஸ்ட்ரோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் வருவதில்லை. மேலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு கால்சியம் அதிகமாக எலும்பால் உறிஞ்சப்படுவதால் இடுப்பெலும்புகள், தண்டுவடம் போன்றவற்றை எந்த வித எலும்பு பாதிப்பும் ஏற்படுவதில்லை.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல்

பிறந்த குழந்தைக்கு நான்கு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந்தால் எக்ஸிமா, ஆஸ்துமா மற்றும் உணவு அழற்சி போன்ற பிரச்சினைகள் அவர்களுக்கு வரும் வாய்பில்லை. இதற்கு காரணம் தாய்ப்பாலில் உள்ள குறைந்த கொழுப்பு சத்து, அதிக புரத சத்து போன்றவை அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி விடுகிறது.

தீடீரென்ற குழந்தை இறப்பு அறிகுறி வர வாய்ப்பு குறைவு

ஆறு மாதம் வரை பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வந்தால் திடீரென தூக்கத்தில் குழந்தை இறக்கும் வாய்ப்பு குறைவு. ஏனெனில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தை தூக்கத்தில் இருந்து எளிதாக எழுந்து விடும். எனவே இது இந்த தீடீரென இறக்கும் அறிகுறியிலிருந்து குழந்தையை காக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் 50% வரை குழந்தை தூக்கத்தில் இறப்பதை தடுக்கலாம்.

புற்று நோய் அபாயம் குறைவு

தாய்ப்பால் கொடுப்பது தாயுக்கும் குழந்தைக்கும் புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நிணநீர் முனைகளில் புற்று நோய், லிம்போபிளாஸ்டிக் லுமியா போன்ற பிரச்சினைகள் வருவது குறைவு.

சீரண சக்தியை அதிகரித்தல்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் குறைந்த அளவே பேதி, வயிறு மந்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவர். தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் குழந்தைகளின் சீரண மண்டலம் நன்றாக வளர்ச்சி அடைய உதவுகிறது.

தாய் எடையை குறைக்க உதவுகிறது

தாய்ப்பால் கொடுப்பதால் தேவையில்லாத கலோரிகள் உடலில் தங்கியுள்ள கொழுப்பு போன்றவை கரைகிறது. இதனால் பெண்கள் தங்கள் கர்ப்ப கால எடையை குறைத்து பழைய நிலைக்கு வர முடிகிறது. தாய்ப்பால் கொடுக்கும் ஒரு தாயுக்கு 400-500 கலோரிகள் வரை தேவைப்படும். இந்த கலோரிகள் முழுவதும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எரிக்கப்பட்டு விடும்.

டயாபெட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்கிறது

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாயுக்கும் இருவருக்குமே டயாபெட்டீஸ் வரும் அபாயத்தை குறைக்கிறது. டைப் 1 மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ் இரண்டையுமே தடுக்கிறது. டயாபெட்டீஸ் என்ற நோய் வந்தால் நரம்பு பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் பாதிப்பு, இதய நோய்கள் போன்றவைகளும் சேர்ந்தே வரும் அபாயம் இருக்கிறது.

கண் பார்வை அதிகரித்தல்

குழந்தைக்கு கண் பார்வை மங்குவதை தாய்ப்பால் தடுக்கிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நல்ல கண்பார்வையுடன் இருப்பர் என்று குழந்தைகள் நல இன்ஸ்டிடியூட் லண்டனிலிருந்து ஒரு ஆய்வறிக்கையை கூறுகிறது.

டெலிவரிக்கு பின்பு உடல் குணமாக உதவுகிறது

தாய்ப்பால் சுரக்க உதவும் ஆக்ஸிடோசின் கருப்பை சுருங்கி விரிவதை சரியாக்கி டெலிவரிக்கு பிறகு ஏற்படும் இரத்த இழப்பை குறைக்கிறது. மேலும் தாய்ப்பால் கொடுப்பது பெண்களின் கருப்பை பழைய நிலைக்கு வடிவத்திற்கு விரிவில் செல்ல உதவுகிறது.

மேலும் தாய்ப்பால் என்பது குழந்தைக்கும் தாயுக்கும் ஒரு ஆரோக்கியமான நன்மைகளை தருவதோடு இருவருக்கிடையே ஒரு உணர்வுப் பூர்வமான பந்தத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.