சிறு நகைச்சுவை கதை, உங்களுக்காக..! கலாம் நினைவு நாளில்..!

0 477

ஒருவர் 3 வது மாடியிலிருக்கும் என்வீட்டிற்கு வந்தார்… உள்ளே வரும்படி அழைத்தேன்..

வந்து உட்கார்ந்தவர், நான் பெயர் மாற்றும் ஜோசியம் பார்க்கிறேன் என்றார்.
அதனால் எனக்கு என்ன பலன் என்று கேட்டேன்…

உங்கள் பெயரை மாற்றினால், நீங்கள் பெரிய அளவில் உயர்ந்துடுவீங்க..
எதுவரை உயருவேன்? ஒரு M.L.A., ஆகா முடியுமா?

M.L.A., என்ன சார், மந்திரியாகவே ஆகலாம்…
அதுக்கு எவ்வளவு காசு தரனும்?
வெறும் ரூபாய் 350/- தான்…

நான். எந்திரிடா.. 350 ரூபாய்க்கு என்னை மந்திரியாக்குற நீ உன் பெயரை மாத்தி, பிரதமராப் போகவேண்டியது தானே? 350 ரூபாய்க்கு ஏன் 3 வது மாடிக்கு முட்டியடிச்சுக்கிட்டு வர என்றவுடன், ஜோசியர் அவசரத்தில் செருப்பை கூட போடாமல் மான் போல தாவிக்குதிச்சு போனயிடம் தெரியல…

கைரேகை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு

You might also like

Leave A Reply

Your email address will not be published.