சிதறு தேங்காயை சாப்பிடலாமா? கூடாதா?
கோவிலின் முன் சிதறு தேங்காய் உடைப்பது பலரின் பிரார்த்தனையாக இருக்கும்
தாங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டுமென்று கோவிலின் முன் சிதறு தேங்காய் உடைப்பது பலரின் பிரார்த்தனையாக இருக்கும்.
அதே வகையில் அந்த வேண்டுதலின் போது உடைக்கும் தேங்காயை எடுத்து சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலரிடமும் இருக்கும்.
சிதறுகாய் உடைத்த தேங்காயை சாப்பிடலாமா?
சிதறுகாய் உடைப்பது என்பது நம் செயல்பாடுகளில் வரும் தடைகள் அனைத்தும் சிதறி விலகி, வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக செய்யப்படும் ஒருவகை பிரார்த்தனை ஆகும்.
அத்தகைய பிரார்த்தனையின் போது கோவில் முன் உடைக்கும் சிதறு தேங்காயை மற்றவர்கள் சாப்பிடுவது சிறந்தது, ஆனால் அந்த தேங்காயை உடைத்தவர்கள் சாப்பிடக் கூடாது.