சமூக வலைதள புரளியில் சிக்கி தவிக்கும் காவிரிமேலாண்மை…! உண்மை என்ன..?

0 1,551

கர்நாடகாவிற்கு தலைவலி ஆரம்பம் ! ஊட்டியில் அணைக்கட்ட கோரி திரண்டு வரும் இளைஞர்கள்..! தேசிய புரட்சியாக உருவெடுப்பதால் பதறும் அரசு..! நாம் ஊட்டியில் இருந்து செல்லும் தண்ணீரின் வழித்தடத்தை மறித்து அணையைக் கட்டினால் போதும்.

கர்நாடகாவிடம் கையேந்தும் நிலை வராது. தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பு இது தான். ஊட்டியில் அணைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடையே பரவி வரும் தகவல் கர்நாடகாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இனியாவது தமிழக அரசு புரிந்து கொண்டு நமது நீர் நமக்கே என்கிற முறையில் ஊட்டியில் அணைக்கட்டி விவசாயிகளின் வாழ்வில் செழிப்பை உண்டாக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். இதை தயவு செய்து பகிருங்கள்… காட்டுத் தீயாக பரவட்டும்…..

உங்களுக்கும் இந்த செய்தி வந்திருக்கும் நீங்களும் சமூ அக்கறையில் உண்மை என்று பகிர்ந்து இருப்பீர்கள் ஆனால் உண்மையா பொய்யா..?
நேரில் சென்று பார்த்தால் உங்களுக்கே புரியும் இது புரளி என்று

4 நாள் பயணம் உதகையை நோக்கி அங்கு இதனை பற்றி அறிய அவலுடன் முன் சென்றோம்..!தமிழக நீலகிரி மலைபகுதியில் உருவாகும் மோயாற்றின் ஒரு பகுதி பைக்காரா அணை பகுதிக்கும், மற்றொரு பகுதி கர்நாடகாவிற்கு செல்கிறது

கர்நாடக என்றால் மைய கர்நாடக அல்ல தமிழக எல்லை அருகே தான் அது
மீண்டும் ஒகேனக்கல் வழியாக தமிழகம் வருகிறது. இதற்கு இடையில் எந்த அணையும் இல்லை 30 TMC தண்ணீர் உருவாகிறது என்றால் அதில் 25 TMC தண்ணீர் தமிழகத்திற்கே வரும்..!

மலைக்கு அந்த புறம் அணைகட்டி மலைக்கு இந்த புறம் உள்ள தமிழகத்திற்கு தண்ணீரை கொண்டுவர நினைப்பது வேடிக்கையான ஒன்றுதான்..!
சந்தேகம் என்றால் நேரில் சென்று பார்த்த இங்கு கேள்விகளை முன் வையுங்கள்
“ மோயாறு நீலகிரியின் நிலக்கோட்டை மற்றும் கூடலூர் பகுதியில் தொடங்கி, முதுமலை புலிகள் வனப்பகுதியில் ஒதுங்கி, தெங்குமரஹாடா அடிவாரத்தில் பாய்ந்து இறுதியாக பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் நிறைவடைகிறது.

மோயாறு பவானி ஆற்றின் ஒரு பகுதி மரங்களடர்ந்த பகுதியில் இருந்து கீழே பாயும் மோயாறு நீலகிரியின் எல்லைப்பகுதியிலும், கர்நாடகாவின் எல்லையோரப் பகுதியிலும் பாய்கிறது. ஆனாலும், மோயாறு கர்நாடகா பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் தமிழகத்திற்குள்ளேயே திரும்பி பவானிசாகர் நீர்த்தேக்கங்களில் வந்தடைகிறது

சமூக வலைத்தளத்தில் பரவிய செய்திகளை உண்மை தன்மை அறியாமால் தயவு செய்து பகிராதீர்கள்..!

உடனே என்னை தமிழன துரோகி தமிழர் விரோத செயல் என்று கூற ஒரு கூட்டம் தயாராக இருக்கும் இருந்தும் இதனை பற்றி தெளிவு கொடுங்கள் பலரும் கேட்டதால் முன் வைக்கிறோம்..! இல்லை இது பொய் என்று யாராவது கூற ஆசைப்பட்டால் தகுந்த ஆதாரத்துடன் வரவும்..!

நன்றி

You might also like

Leave A Reply

Your email address will not be published.