குழந்தைகளின் தொண்டையில் ஏதேனும் சிக்கி கொண்டால் என்ன செய்வது?

0 732

குழந்தைகள் விளையாடும்போது அல்லது சாப்பிடும்போது திடீரென ஏதேனும் தொண்டையில் சிக்கி கொண்டால் தொடர்ச்சியான இருமலுடன் மூச்சு திணறல் ஏற்படும்.குழந்தை தொண்டையை பிடித்து கொண்டு இருமவோ அல்லது அழுகவோ செய்யும்.

இவ்வாறு நிகழ்ந்தால் உடனே சிறிய குழந்தையாக இருந்தால் குழந்தையை தலைகீழாக கீழே உள்ள படத்தில் உள்ளது போல செய்யவும்.

பெரிய குழந்தையாக இருந்தால், சுய நினைவுடன் இருக்கும்பட்சத்தில் கீழே உள்ளது போல செய்யலாம்.

பெரிய குழந்தை, சுயநினைவு இல்லாமல் இருந்தால் கீழே உள்ளதுபோல செய்வதன் மூலம் குழந்தையை காப்பாற்ற முடியும்.

குழந்தை மூச்சு விட வில்லை என்றால் குழந்தையின் வாயில் உங்கள் வாய் வைத்து மூச்சு கொடுக்கலாம்.உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு மூச்சு கொடுத்துகொண்டே அழைத்து செல்லவும்.
வாயில் கையை விட்டு பொருளை எடுக்க முயற்சி செய்தல் கூடாது.

அதிகமாக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கபடுகிறார்கள்.
சில உணவுபொருட்கள்
பட்டாணி, கடலை,
பாப் கார்ன்
முழு திராட்சை, ஆப்பிள் துண்டு
சூயிங் கம்
சாக்லேட்ஸ்
சில விளையாட்டு பொருட்கள்
நாணயங்கள்
பலூன்
பட்டன் பேட்டரி
சிறிய குண்டுகள், உலோகத்தால் ஆன தோடு போன்ற ஆபரணங்கள்
பேனா மூடி

சிறிய குழந்தைகள் உங்கள் கண்காணிப்பில் சாப்பிடட்டும்.
சாப்பிடும்போது ஓடி ஆடி விளையாடுவதை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு நன்றாக மென்று சாப்பிட கற்றுகொடுங்கள்
முடிந்தவரை சிறிய குழந்தைகளுக்கு நன்றாக பொடி செய்த உணவுகளை கொடுக்கவும். பெரிய துண்டுகள் எளிதில் தொண்டையில் சிக்கி கொள்ளும்.

விளையாட்டு பொம்மைகளில் மிகவும் கவனம் தேவை (குழந்தைகளுக்கு பொம்மைகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பதை வேறு பதிவில் கூறுகிறேன்)
குழந்தைகளின் கையில் நாணயங்களை கொடுக்காதீர்கள்.

பதிவு: DR.C.MAHESH KUMAR

You might also like

Leave A Reply

Your email address will not be published.