கல்லணை திருடு போனது பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஒரு மாபெரும் திருட்டு..!

0 583

திருச்சி என்றால் காவிரி எப்படி நம் நினைவுக்கு வருமா அப்படியே காவிரி என்றால் கல்லணையும் நம் நினைவுக்கு வரும்காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்ததைக் கண்டு அதைத் தடுத்து நிறுத்த கரிகாலனால் எழுப்பப்பட்டதே கல்லணைபாய்ந்தோடும் காவிரி நீர் மீது அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் அக்கால பொறியாளர்கள்காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் காலப்போக்கில் நீர் அதிகரித்து வரவர போட்டோ பாறைகள் அனைத்தும் மண்ணுக்குள் சென்றன மண்ணுக்குள் சென்ற பாறைகள் மீது மீண்டும் எங்கிருந்தோ கொண்டு வந்த பாறைகள் அடுக்கினர் நீரில் அடித்துச் செல்ல முடியாத நீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணால் அங்கே உள்ள பாறைகளை ஓட்ட ஆரம்பித்தார்கள்இப்படிப் பாறைகளின் மீது பாறைகளை போட்டு கட்டப்பட்டது தான் கல்லணை பெயர் காரணமும் இதுதான்வேர்டு ஸ்மித் என்ற ஆங்கிலேய பொறியியல் வல்லுநர் 1853ஆம் ஆண்டு எழுதிய தென்னிந்தியாவின் பாசனம் எனும் நூலில் கல்லணையின் வரலாற்று சிறப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்

கல்லணையை ஒரு மிகச் சிறந்த பொறியியல் சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார் பெரும் வெள்ளம் வந்தாலும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்பெரும் வெள்ளம் வந்தாலும் அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் திருச்சியிலிருந்து கல்லணைக்கு செல்லும் வழியில் கல்லணைக்கு மூன்று கிலோமீட்டர் முன்னதாக உள்ள உத்தமசீலி இருக்கும் கிளிக்கூட்டம் இடையே உள்ள ஒரு தாழ்வான பகுதி முழுக்க கல்லணை கட்டப்பட்ட அதே கற்களைக் கொண்டு நீர்வழிச் சாலை முழுவதும் பதித்துள்ளார்கள்அதிகம் வெள்ளம் வரும் பொழுது தாழ்வான பகுதி என்பதால் நீர் வெளியேறும் அதேசமயம் நீர் வெளியேறும் பொழுது மண்ணரிப்பு காரணமாக விவசாய நிலங்களுக்கும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இது போன்ற கற்களை பதித்து உள்ளதாக தகவல் தெரிகிறது என்ற தொலைநோக்குப் பார்வையோடு கரிகாலன் கட்டிய கல்லணை கற்கள் தற்போது இங்கு இல்லை

கல்லணைக்கு சாலை போடும் ஒரு ஒப்பந்தக்காரர் இந்தக் கற்கள் எல்லாம் அரசு அதிகாரிகளின் உதவியோடு அந்த ஊரில் இருந்தவர்களின் உதவியோடும் திருடியுள்ளார்..!பழங்கால கற்களால் போடப்பட்டிருந்த சாலையில் தற்போது பல பலவென சிமெண்ட்டால் போடப்பட்டுள்ளன இவை ஒரு பெரும் வெள்ளம் வந்தால் கூட தாங்காது என்பது நிதர்சனம்

இதில் உண்மையைத் தேடும் பொழுது தெரிந்த தகவல் என்னவென்றால் திருச்சியை சேர்ந்த காண்டாரக்டர் கண்ணன் 35 கோடி ரூபாய்க்கு கண்ராக்ட் எடுத்ததாகவும் இங்கு இருந்த கற்களை அகற்றி திருச்சி_புதுக்கோட்டை சாலை அருகே உள்ள மோரைஸ் சிட்டியில் கொண்டு 5 கிலோ மீட்டர் நீளத்தில் 120 ஏக்கர் நிலத்தினை இந்த கற்களை கொண்டு காம்பௌண்ட் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிறது

காசுக்காக பலங்கால கற்களை திருடி விற்க அதிகாரிகள் துணை போிறார்கள். கல்லணை கற்கள் களவு போனது பற்றி பெரிய விவாதம் அல்ல நாளை கல்லணையே காணாமல் போகவும் வாய்ப்புள்ளது..!

You might also like

Leave A Reply

Your email address will not be published.