என்றாவது ஒருநாள் இதை நீங்கள் படித்திருப்பீர்கள் ஆனால் எழுதியவர் யார் என்று தெரியவாய்ப்பில்லை..!
விவசாய தாயின் கடைசி ஆசை
மகனே……நீ மண்வெட்டியை எடுத்துவிடதே…..
இந்தஉலகம் உன்னை மடையன் என்று கூறிவிடும்….!!!
மகனே……நீ ஏர் கலப்பை ஏந்திவிடதே…….
இந்தஉலகம் உன்னை ஏமாளி என்று கூறிவிடும்….!!!
மகனே……. நீ கோவனம் கட்டிவிடதே…..
இந்த உலகம் உன்னை பிச்சைக்காரன் என்று கூறிவிடும்….!!!
மகனே……நீ விவசாயின் மகன் என்று கூறிவிடாதே…..
இவ்வுலகம் உன்னை விரட்டி அடிக்க கூடும்….!!!
மகனே….கடைசியாக ஒன்றுகூறுகிறேன்….
இனிமேல் விவசாயத்தை
உன்குடும்ப பசிக்காக மட்டுமே செய்…
ஊருக்காக இனி விவசாயம் செய்து விடாதே….
பிறகு பார்….
இவ்வுலகமே உன் காலில் விழும்…
இப்படிக்கு,
கடைசிவிவசாயி.
விவசாயிகள், விவசாய ஆர்வலர்கள், விவசாய விரும்பிகள் பகிரவும்
இதை எழுதியது விவசாயத்தை காப்போம் பக்கத்தில் உள்ள ஒரு நபர் தான்..!
விவசாயத்தை காப்போம் பக்கத்தை ஆரம்பிக்க அடித்தளமிட்ட பதிவும் கூட இது..!
விவசாயத்தை காப்போம் Tamilnadu MEMES பக்கத்தோடு கரம்கோர்த்து பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள்