இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அது சொன்னார் இது சொன்னார் என்று மற்ற ஊடகங்களை போன்று கதைகள் கூற ஆசைப்படவில்லை…!
எத்தனை காலம் தமிழக அரசின் ஊழலை கண்டு புலம்புவீர்கள்..? இனியாவது வாழ்த்துங்கள்..! காரணம் வாக்காளர் நாம் தானே..
கடம்பூர் மலைப்பகுதியில், பின்பக்க கண்ணாடி இல்லாமல் இயக்கப்படும் அரசு பேருந்து
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில், இயக்கப்படும் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால், மலைகிராம மக்கள் அவதியடைந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை உள்ளடக்கிய கடம்பூர் மலைப்பகுதிக்கு, ஒரு தனியார் பேருந்தும், 4 அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதில், அரசு பேருந்து ஒன்று, பின்பக்க கண்ணாடி இல்லாமல் இயக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அது சொன்னார் இது சொன்னார் என்று மற்ற ஊடகங்களை போன்று கதைகள் கூற ஆசைப்படவில்லை…!
உண்மை என்னவென்றால் பேருந்து பாராமரிப்பு சரியில்லை பிறகு அதில் ஊழல் நடந்துள்ளது இதையெல்லாம் ஏன் எந்த ஊடகமும் வெளியிடுவதில்லை..?