இங்கு வந்துசேர இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’ இவை ஏதும் இல்லை பின் எப்படி வந்து சேர்ந்தன இங்கு..?
இயற்கை
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி
இடைப்பகுதி தொடங்கி
பங்குனி முடியும் வரை
எங்கள் வேடந்தாங்கல்
ஏரி நீர் நிரம்பி வழிய
ஏரியின் சிறிய தீவுகளில்
மரங்கள் செழுத்து வளர்ந்திருக்க
இந்திய எல்லைகள் தாண்டி
ஆயிரம் ஆயிரம் மையில்களுக்கு அப்பாலிருந்து
சிறகால் பறந்தே இங்கு வந்தடைகின்றன
வித விதமான புள்ளினங்கள்
இவற்றிற்கு இங்கு வந்துசேர
இவற்றிடம் , ‘காம்பஸ்’,’ஜீ .பீ.எஸ்’ இவை
ஏதும் இல்லை
பின் எப்படி வந்து சேர்ந்தன இங்கு..?
இன்று நான் என் காரில்
அங்கு சென்று இந்த பறவைகளின்
அழகைப்பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன்
எனக்கு வழிகாட்ட, என்னிடம் ‘ஜீ.பீ.எஸ்.!
வழிநெடுக சைன்-போர்டு சாலைகளில்,
மற்றும் பேசி தெரிந்துக்கொள்ள ஆட்களமுண்டு
இந்த புள்ளினங்களுக்கு யார் வழி காட்டி?
அவை எப்படி இங்கு வந்தடைகின்றன, அதுவும்
வருடம் தவறாது பருவத்தில்!
என்னே விந்தைதரும் இந்த இயற்கை !