ஆயுத பூஜை விழா: சாலையின் நடுவில் பூசணிக்காய் உடைக்காதீர்கள் வேண்டுகோள் பதிவு..!

0 234

ஆயுத பூஜை விழா தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு வழங்கவும், ரோந்து செல்லவும் ஆங்காங்கே காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

ஆயுத பூஜை விழாவையொட்டி மாநகர போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் பூஜை செய்து சாலையின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு சாலையின் நடுவே உடைக்கப்படும் பூசணிக்காயால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

எனவே போக்குவரத்து வாகனங்களுக்கு பாதிப்பு இல்லாத வண்ணம் சாலைகளின் ஓரங்களில் பூசணிக்காயை உடைத்து, விபத்துகள் அற்ற ஆயுதபூஜை விழாவை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.