அழிந்து வரும் தமிழக நாட்டு நாய்கள்”:என்னென்ன வகைகள் தெரியுமா?
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் தமிழக காளைகள் அழிந்து வருவதாக,தமிழக இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக காளைகளைப் போலவே,தமிழகத்தின் நாட்டு நாய்களும் அழிந்து வருகின்றன.அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்..!
கன்னி:
சுயமாக சிந்திக்கக் கூடிய நாட்டு நாயினம் என்பது கன்னியின் சிறப்பு.மிக எளிதாக மனிதர்களுடன் நட்பு பாராட்டும்.முற்காலத்தில் புகுந்த வீடு செல்லும் மணப்பெண்களுக்கு சீதனமாக கன்னி இன நாய்கள் வழங்கப்படும்.
சிப்பிப்பாறை:
முயலை விட வேகமாக ஓடக்கூடியது.மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகம் வரை ஓடும்.மற்ற நாட்டு நாய்களை விட,மனிதர்களுடன் நெருங்கிப் பழகும்.வேட்டையில் சிறப்பாக செயல்படும்.
கோம்பை:
பண்ணைகளை காவல் காப்பதில் கோம்பையை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது.சற்று ஆக்ரோஷமாக நடந்து கொள்ளும்.ஒரு எருமையை தனியாளாக வேட்டையாடும் திறமையுடையது.
ராஜபாளையம்:
இந்த இன நாய்கள் உயரத்திற்கு பேர் போனது.சுமார் 75 செ.மீ உயரம் வரை வளரும்.உரிமையாளருக்கு மிகவும் விசுவாசமானது.ஒரு காலத்தில் செல்வ செழிப்பு மிக்க நபர்கள் மட்டுமே இந்த வகை நாய்களை வளர்த்து வந்தனர்