ஆமாங்க ஒரு காலத்தில் அரிசி மாவுல தாங்க கோலமே போட்டாங்க அது வெறுமனே கோலமிடுவது என்று கூறிவிடமுடியாது அதில் ஒரு வகை தர்மம் உள்ளது,ஒரு வகை தானமே.
மார்கழி மாதம் என்பது மூடு பனி, மழைக்காலம் என்பதால் எறும்பு, சிரு பூச்சிகள், தனக்கான உணவை சேகரிக்க முடியாது காரணம் இலை,பயிர் மேல் பனி உறைந்து இருக்கும் அங்கு சென்றால் இவையெல்லாம் இறந்து விடும் ஆகையால் வீடுகளை நோக்கி படையெடுப்பு நடத்தும்.
இந்த அரிசி மாவு கோலம் எறும்பு பூச்சி குருவிகளுக்கு உணவாக மாறுகிறது.
கோலம் என்பது பெண்களின் உடலுக்கு நன்மை அளிக்கும் அதேவேளையில் விலங்குகளுக்கும் உணவாகட்டும் என்ற தத்துவம் இந்தியர்களின் பழக்க வழக்கங்களில் மட்டுமே காணப்படும் உயரிய பண்பாகும்.
இனியும் உங்கள் வீட்டு வாசலில் ஸ்டிக்கர் கோலத்தை அலங்காரத்திற்கு ஒட்டாமல், அர்த்தமுள்ள அரிசி கோலத்தைப் போட பழகிக்கொள்ளுங்கள். உங்கள் வீடு அடுக்குமாடி குடியிறுப்பில் இருந்தாலும் பிரச்சனை இல்லை. உங்கள் வீட்டின் முன் இருக்கும் சிறிய வாசலில் சிறிய கோலமிட்டு அனுதினமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் கோலம் இன்று 10%வீடுகளில் கூட அரிசி மாவுல போடுவது கிடையாது…!