அதில் ஒரு திருநங்கை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே பேசினார். உண்மையாகவே மனதை பாதித்தது..!

0 555

மனதை உருக்கிய சம்பவம்!!!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.

அதில் ஒரு திருநங்கை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகவே பேசினார்…

தூத்துக்குடியில் நீங்கள் சுட்டுக் கொலை செய்தவர்களுக்கு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இழப்பை உங்களால் எதனாலும் ஈடு செய்ய முடியாது.

இனி சுடுவதாக இருந்தால் எங்களைச் சுடுங்கள்!

நாங்கள் ஏற்கனவே குடும்பத்தாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட அனாதைகள்!

நாங்கள் செத்தால் அழுவதற்கு கூட எந்த நாதியும் கிடையாது!

மேலும் எங்களைச் சுட்டால் உங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்!

நீங்கள் எந்த விசாரணைக் கமிஷனிலும் பதில் சொல்லத் தேவை இருக்காது!

#BanSterlite

You might also like

Leave A Reply

Your email address will not be published.