தோள்ல தூக்கி வளர்த்த பிள்ளைங்கலாம்
என்னை தொல்லைனு சொல்லி ஒதுக்கிருச்சு
காசு பணம் இருக்கும்போது காலைப்பிடிக்ககூட ஆள் உண்டு
காசெல்லாம் கரைஞ்சிருச்சு
அதான்
மரியாதை குறைஞ்சிருச்சு
நான் ஊட்டி ஊட்டி வளத்ததுங்க எல்லாம்
ஊட்டியில பொழைச்சிருக்க
நாலு வாய் சோத்துக்கே
நான் நாதியத்து அலையிறேனே
நிற்க நிழலில்ல
படுக்க பாயில்ல
மனுசனே இங்க இல்ல
குரங்கு மாதிரி அலையுறேன்னு
என் ஆறுதலா
குரங்குராசா நீ வந்துட்டியா
பாதி பழம் நீ திங்க நான் கொடுத்தேன்
அந்த நேசத்துக்கா
என்னை பாசமாக பார்த்துக்கிற
மனுசன்தான் உயர்ந்தவன்னு சொல்லி வச்சது யாரு
இரக்கத்துல கண்கலங்கும் இந்த குரங்க கொஞ்சம் பாரு
எனக்கு என்ன வேணும்னு கேட்குறியே குரங்குராசா
உனக்கு பிரதிபலனா தர்றதுக்கு என்கிட்டயும் ஒன்னு இருக்கு கேளு ராசா
அடுத்த ஜென்மத்துல
குரங்கா நானும் பிறக்குறேன்
பத்து குரங்கையாவது பால் குடுத்து நான் வளர்க்குறேன்…!
ஆக்கம்: வே.ரா.சேகரன்