கீழ்கண்ட செயல்பாடுகள் தோன்றினால் மழை வரும் என்பது முன்னோரின் சொல் மட்டுமல்ல இயற்கையின் நியதி..!
- தும்பி பறந்தால் தூரத்தில் மழை
- தட்டான் தாழப் பறந்தால் மழை
- அந்தி ஈசல் அடமழை
- எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.
- தவளை கத்தினால் மழைமாடு மயங்கி வானம் பார்த்தால் மழை
- கொக்கு மேடேறினால் மழைபகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை
- கழுதை காதை உயர்த்தினால் மழை
- ஈசல் பறந்தால் மழை புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை
- பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை
- பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.
- பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை
- மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை
- குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை
- ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை
- பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.
- மயில்கள் நடனமாடினால் மழை
- பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை
- பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை
- பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை
- நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை
- சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை
- மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.
- பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.
- நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.
- இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழைசந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.
- வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை
- மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை
- இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை
நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்