பாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது என்பது உண்மை என்று தெரியாமலே சில முட்டுக்கட்டைகள் தீவிரமாக முட்டுகொடுப்பது ஏன்..?
வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக அதன் உற்பத்தி குறைந்தது. இதனால் வரத்தும் குறைந்ததால், பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை ஏறத் தொடங்கியது. எனவே விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதற்காக கனிம, உலோகங்கள் வர்த்தக நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தான்,சீனா, எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பொய்யின்னு சொல்லிட்டு வரமா வீட்டுல வெங்காயம் இல்லாமல் குழம்பு வைக்க தொண்டர்கள் பழகிக்கொள்ள வேண்டிகொள்கிறோம்