சித்ரா தங்கியிருந்த ஹொட்டல் அறைக்குள் வந்த அவருக்கு நன்கு அறிமுகமான நபர்? அவர் பிரபல அரசியல் புள்ளியா? புதிய பகீர் தகவல்

0 1,008

சின்னத்திரை நடிகை சித்ரா ஹொட்டலில் சடலமாக கிடந்த வழக்கில் அவர் கணவர் ஹேமந்த் தவிர்த்து மூன்றாவதாக ஒரு நபருக்கும் தொடர்பிருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சித்ரா கடந்த 9ஆம் திகதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த வழக்கை பொலிசாருடன் சேர்ந்து ஆர்டிஓ அதிகாரி திவ்யாஸ்ரீயும் விசாரித்தார்.ஏற்கனவே சித்ராவை த ற் கொ லைக்கு தூண்டியதாக அவர் கணவர் ஹேமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர். இதனிடையில் சித்ரா வழக்கு தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி சித்ரா தூக்கிட்டு த ற் கொ லை செய்த பின்னர் ஹேமந்தும், ஹொட்டல் ஊழியர் கணேஷும் பொலிசாருக்கு தகவல் கொடுக்காமல் சடலத்தை அவர்களே கீழே இறக்கியுள்ளனர்.

இந்த விடயத்தை பொலிசார் இன்னும் சந்தேக கண்ணோடு தான் பார்க்கிறார்கள். அதே போல சித்ரா, அறையில் இருந்த போது, தான் வெளியே சென்றதாக ஹேமந்த் கூறியிருக்கிறார்.அந்த சமயத்தில் வேறு யாராவது சித்ரா அறைக்குள் சென்று அவரை கொ லை செய்துவிட்டு ஹொட்டல் அறையின் பூட்டில் அமைக்கப்பட்டுள்ள

தானியங்கி மூடும் வசதியை பயன்படுத்தி கதவை மூடிவிட்டு சென்றிருக்கலாம் எனவு பொலிசார் தற்போது சந்தேகின்றனர்.அதன்படி சித்ராவின் மரணத்தில் 3வது நபருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறும் பொலிசார் அது அவருக்கு நன்கு தெரிந்த பிரபலமான அரசியல் புள்ளிகளில் ஒருவராக இருக்கலாம்.

எனவும் தற்போது சந்தேகத்தை கிளப்புகின்றனர்.இதன்மூலம் சித்ராவின் வழக்கு மீண்டும் பரபரப்பான திசையை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.