உயிரை விடுவதற்கு முன்னர் மாமனாரிடம் அழுது கொண்டே என்ன பேசினார் சித்ரா? வெளியானது ஓடியோவில் பேசிய வார்த்தைகள்!
த ற் கொ லைக்கு முன்னர் சித்ரா தனது மாமனாரிடம் பேசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் திகதி தனியார் சொகுசு ஹொட்டலில் கணவர் ஹேமந்துடன் தங்கினார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் த ற் கொ லை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஹேமந்தை கைது செய்துள்ளனர்.இதனிடையில் உ யி ரை விடுவதற்கு முன்னர் ஹேமந்தின் தந்தையும், தனது மாமனாருமான ரவிச்சந்திரனிடம் வெகுநேரமாக பேசியிருக்கிறார் சித்ரா.அந்த ஓடியோ ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சைபர் கிரைம் பொலிசார் மூலம் அந்த ஆதாரங்கள் மீட்கப்பட்டது. இதை வைத்தே ஹேமந்தை பொலிசார் கைது செய்தனர்.இந்த நிலையில் ரவிச்சந்திரனுடன் சித்ரா என்ன பேசினார் என தற்போது தெரியவந்துள்ளது.அதில், சந்தேகத்தால், தினம் தினம் கேவலமான வார்த்தைகளால் ஹேமந்த் திட்டி தன்னை காயப்படுத்துவதாக சொல்லி கதறி அழுதாராம் சித்ரா.
இன்னும் சிறிது நாளில் ஊரறிய கல்யாணம் நடக்க போகும் சூழலில் இப்படி அவர் செய்வது சரியில்லை என்று கண்ணீர் விட்டுள்ளார்.மேலும் இதுநாள் வரையில் தங்களுக்குள் நடந்த சண்டைகளை ஒன்றுவிடாமல் மாமனார் ரவிச்சந்திரனிடம் சொல்லி அழுதுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனிடையில் ஆர்டிஓ விசாரணை முடிந்தபிறகு, யாரை காப்பாற்ற இந்த கைது நடந்துள்ளது என்று சித்ரா மாமனார் ஏன் கேட்டார் என்றே தெரியவில்லை.. இப்போது இந்த ஓடியோவால் அவரும் வசமாக சிக்கியிருக்கிறார்.