முல்லையாக பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கிறேனா? சரண்யா கொடுத்த விளக்கம்..!

0 197

முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பாத்திரத்தில் நடித்துவந்த சித்ராவின் ‘கிராமத்து மொழிநடைப் பேச்சு’ அனைவருக்கும் ரொம்பப் பிடிக்கும். தமிழகம் முழுவதுமே பரவலாக சித்ராவுக்கு ரசிகர் வட்டம் உண்டு.

இந்நிலையில் சித்ரா தி டீ ரென நட்சத்திர விடுதி ஒன்றில் த ற் கொ லை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இதனிடையே சித்ராவின் மரணம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்திவருகிறார். முல்லையின் மறைவு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சீரியலில் முல்லை பாத்திரத்த்ல் சரண்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சரண்யா, ‘’தனது நிறைவான நடிப்பால் முல்லையாக சித்ரா அங்கீகாரம் பெற்றுவிட்டார். அது எப்போதும் மக்கள் மனதிலேயே இருக்க வேண்டும்.’ எனக் கூறியுள்ளார். இதனால் சித்ரா கேரக்டரில் சரண்யா இப்போது வரை நடிக்க கமிட் எதுவும் ஆகவில்லை எனத் தெரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.