என்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை? பிக்பாஸ் சரவணனின் பதில்

0 525

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான்.ஏனென்றால், சனம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் டைட்டில் வின்னர் ஆனார் என குற்றம் சாட்டி இருந்தார். அதை சனம் ஒரு டாஸ்கில் கடிதத்தின் மூலமும் தெரிவிக்க அந்த ப்ரோமோவை விஜய் டிவி நீக்கி இருந்தது.இதனால், கடுப்பான அந்த நிறுவனமான ஜே மைக்கல் என்பவர் பாலாஜி மீது வழக்கு தொடர்வதாகவும், மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சரவணன், பாலாஜிக்கு ரெட் கார்டு அளிக்கப்படாதது குறித்து பேசியுள்ளார்.அதில், உங்களுக்கு கொடுத்தது போல பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுப்படவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

அதற்கு, எனக்கு ஏன் நடந்தது என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து உடன் பேட்டி எடுத்தபோது அப்போதே சொல்லிவிட்டேன் பிக்பாஸ் பற்றி கேட்காதீர்கள் என்று.அதனால், விஜய் டிவி பற்றியும் பிக்பாஸ் பற்றியும் நான் எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை. பாலாஜியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஏன் ரெட்கார்டு கொடுக்கவில்லை என்று கமல் சார் மற்றும் அவர்களது டீம் கிட்ட தான் கேட்க வேண்டும்.

என்னை பற்றியே எனக்கே தெரியவில்லை.. ஏன் அனுப்பினாங்க என்று, ஆனால் 46 நாள் நான் உள்ளே இருந்தவரை சந்தோஷமாக இருந்தேன் என கூறினார்..மேலும், திரும்ப பிக்பாஸிற்கு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் போகவே மாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.