சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது இமான் அண்ணாச்சி தான். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் தொலைக்காட்சி அண்ணாச்சி.இவர் சொலுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். அதன் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி.
அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அண்ணாச்சியின் தற்போது சன் தொலைக்காட்சியில் ‘சீனியர் அண்ணாச்சியின் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரை மட்டுமல்லாது சினிமாவில் பல படங்களில் கலக்கியவர் நமது இமான் அண்ணாச்சி.
இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது இயக்குனர் விக்ரமன் தான். விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தின் ஆண்டு திரைப்படத்தில் அறிமுகமானார்.
அண்ணாச்சி அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அண்ணாச்சி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் இவரது மனைவி யார் என்று தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
மனைவியை பற்றி கூறியது;
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அண்ணாச்சி தனது மனைவி குறித்து பேசியுள்ளார். அதில் ‘நான் மிகவும் சிறிய பள்ளியில்தான் படித்தேன். அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். நான் படித்து முடித்த பள்ளியில் பச்சமுத்து என்ற ஒரு ஆசிரியர் பணி புரிந்து வந்தார் அவர் மகளை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.